• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

’கனடா வேண்டாம் ; தமிழ்நாடே போதும்’:ஏ.ஆர் ரகுமான் திட்டவட்டம்..!

February 9, 2017 tamilsamayam.com

கனடாவில் குடியேற வேண்டும் என கனடா பிரதமர் விடுத்த அழைப்புக்கு ஏ.ஆர்.ரகுமான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கனடா நாட்டின் டொராண்டோ நகருக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்றிருந்தார்.இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரகுமானின் சாதனைகளை குறிக்கும் வகையில் இசைத் தொகுப்பு ஒன்றை அரங்கேற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டொராண்டோ நகரின் மேயர் ஜான் டிராய்,ஏ.ஆர்.ரகுமான் கனடாவில் குடியேற வேண்டும் என அந்த இசை நிகழ்ச்சியின் மேடையிலேயே அழைப்பு விடுத்தார்.டொராண்டோ மேயரின் இந்த அழைப்புக்கு,தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம் பதிலளித்துள்ள ஏ.ஆர்.ரகுமான்,தமிழ்நாட்டில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

”கனடாவில் குடியேற வேண்டும் என அழைப்பு விடுத்த மேயருக்கு நன்றி.உங்களுடைய அன்பினாலும்,விருந்தோம்பலிலும் நான் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளேன்.நான் தற்போது தமிழ்நாட்டில் என்னுடைய குடும்பம்,நண்பர்கள் மற்றும் மக்களோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறேன்.நீங்கள் அடுத்த முறை இந்தியா வரும்போது,என்னுடைய கே.எம் இசைப்பள்ளிக்கு வருகை தர வேண்டும்.

மேலும் இந்தியா மற்றும் கனடா நாடுகள் இணைந்து இசையில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.” என ஏ.ஆர்.ரகுமான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க