• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனி அறையில் தனுஷை நீதிபதி ரகசிய விசாரணை!

March 10, 2017 tamilsamayam.com

நடிகர் தனுஷை உரிமை கொண்டாடும் வழக்கை மார்ச் 20-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

சிவகங்கையின் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை ரத்து செய்ய கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் கதிரேசன்,மீனாட்சி சார்பில் பல ஆதாராங்கள், சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டது. அவற்றில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா? என உறுதி செய்ய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 2ல் தனுஷ் நேரில் ஆஜரானார். இந்தநிலையில் தனுஷ் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ், அவரை உரிமை கொண்டாடும் தம்பதி சார்பில் தனி அறையில் நீதிபதி முன் வாதம் நடந்தது.

இதை கேமிராவில் பதிவு செய்தததுடன், சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் வாதத்துக்கு பின் இந்த வழக்கை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்துப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க