• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனித உரிமை போராளிகளுக்கு கிடைத்த மரியாதை: ஜோக்கர் இயக்குனர்

April 8, 2017 tamilsamayam.com

ஜோக்கர் படத்திற்கு சிறந்த தமிழ்படத்திற்கான 64வது தேசிய திரைப்பட விருது கிடைத்தது.

டெல்லியில் நேற்று 64வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது. இதில் இயக்குனர், தயாரிப்பாளரான பிரியதர்ஷன் தலைமையிலான குழு 64வது தேசிய திரைப்பட விருது பட்டியலை வெளியிட்டது. இதில் சிறந்த தமிழ் படத்திற்கான 64வது தேசிய திரைப்பட விருது ஜோக்கர் படத்திற்கு கிடைத்தது.

இது தொடர்பாக ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அதில் கூறியிருப்பதாவது:

ஜோக்கர் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. நான் விருதுக்காக படம் எடுப்பதில்லை. சரியாக படம் எடுத்து தியேட்டருக்கு கொண்டு போய் சேர்த்தாலே அந்த படத்திற்கு விருது கிடைத்தது மாதிரிதான்.

ஜோக்கர் படத்தை அரசியல் படமாக கொடுத்திருப்பது எனக்கு பின்னால் வருபவர்களுக்கு நிச்சயமாக வழிகாட்டும். இப்படம் மனித உரிமை போராளிகள் பற்றிய படம். இப்படத்திற்கு விருது கிடைத்ததன் மூலம் அவர்களுக்கான மரியாதையை பெற்றுக்கொடுத்ததாக கருதுகிறேன். அதிகாரத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலுக்கு கிடைத்த மரியாதையாக நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க