• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சென்ற கார் விபத்து

May 12, 2018 தண்டோரா குழு

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சென்ற கார் நேற்று விபத்துக்குள்ளானது.

இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் தற்போது மும்பையில் தங்கி நடித்து வருகிறார்.அவர் தற்போது சல்மான் கானுடன் இணைந்து ரேஸ் 3 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரேஸ் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதால் படக்குழுவினருக்கு சல்மான் கான் அவரது விட்டில் நேற்று பார்ட்டி கொடுத்தார்.இந்த பார்ட்டியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் படத்தில் நடித்த மொத்த நடிகர்களும் கலந்துக் கொண்டனர்.

அந்த பார்ட்டி-யை முடித்து விட்டு ஜாக்குலின் பெர்னாண்டஸ் இரவு 2:20 மணியளவில் சல்மான் கான் வீட்டிலிருந்து கிளம்பினார்.பின்னர் சுமார் இருபது நிமிடங்கள் கழித்து கார்டர் சாலையில் சென்றபோது ஜாக்குலினின் கார்,அந்த வழியாக வந்த ஆட்டோவில் மோதியிருக்கிறது.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஜாக்குலின் பெர்ணான்டஸ்ற்கு எந்த காயமும் ஏற்படவில்லை.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க