• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்!

August 23, 2018 தண்டோரா குழு

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘கனா’.மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார்.

அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில்,’கனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்றது.

அப்போது,சிவகார்த்திகேயன் தனது தனது சொந்த தயாரிப்பில் எடுக்கவிருக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதில் ஹீரோவாக விஜய் டிவி புகழ் ரியோ ராஜ் நடிக்கிறார்.இப்படத்தை ப்ளாக் ஷீப் குழு இயக்கவிருக்கிறது.விழா மேடையில்,சுட்டி அரவிந்த்,ஆர்ஜே விக்னேஷ்,அன்பு தாசன் உட்பட 20 பேர் கொண்ட பிளாக் ஷீப் குழுவை சிவகார்த்திகேயன் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது பேசிய சிவகார்த்திகேயன்,

“நான் சம்பாதிக்கும் காசு எனக்கு மட்டுமல்லாமல் என்னோட இருப்பவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்க வேண்டும்.அதனால் என்னால் முடிந்தவரை இதுபோன்று சினிமாவில் இருப்பவர்களை முன்னேற்ற முயற்சி செய்வேன்.அதற்காகத்தான் இம்மாதிரியான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறேன்” எனக் கூறினார்.

மேலும் படிக்க