• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் பகத் பாசில் திடீர் கைது

December 26, 2017 தண்டோரா குழு

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசில் அண்மையில் மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சுரேஷ் கோபி, அமலா பால் மற்றும் பகத் பாசில் ஆகியோர் சொகுசு கார் இறக்குமதி செய்து, அதனை புதுச்சேரியில் பதிவு செய்து கேரள அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக பகத் பாசில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் உரிய அதிகாரிகளிடம் தன்னுடைய விளக்கத்தை அளித்தார். அப்போது, தான் வரி ஏய்ப்பு செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்த தொகையை கட்ட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பகத் பாசில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பகல் பாசில் கைது செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க