December 26, 2017
தண்டோரா குழு
மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசில் அண்மையில் மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சுரேஷ் கோபி, அமலா பால் மற்றும் பகத் பாசில் ஆகியோர் சொகுசு கார் இறக்குமதி செய்து, அதனை புதுச்சேரியில் பதிவு செய்து கேரள அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக பகத் பாசில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் உரிய அதிகாரிகளிடம் தன்னுடைய விளக்கத்தை அளித்தார். அப்போது, தான் வரி ஏய்ப்பு செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்த தொகையை கட்ட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பகத் பாசில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பகல் பாசில் கைது செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.