• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் பகத் பாசில் திடீர் கைது

December 26, 2017 தண்டோரா குழு

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசில் அண்மையில் மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சுரேஷ் கோபி, அமலா பால் மற்றும் பகத் பாசில் ஆகியோர் சொகுசு கார் இறக்குமதி செய்து, அதனை புதுச்சேரியில் பதிவு செய்து கேரள அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக பகத் பாசில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் உரிய அதிகாரிகளிடம் தன்னுடைய விளக்கத்தை அளித்தார். அப்போது, தான் வரி ஏய்ப்பு செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்த தொகையை கட்ட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பகத் பாசில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பகல் பாசில் கைது செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க