தமிழில் ‘பில்லா’,’அறிந்தும் அறியாமலும்’,’பட்டியல்’ போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன்.கடைசியாக ஆர்யா கிருஷ்ணா நடிப்பில் உருவான யட்சன் படத்தை இயக்கினார்.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன்,தற்போது தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளார்.முதன்முறையாக ஒரு பாலிவுட் படத்தை இயக்க இருக்கிறார்.இதுகுறித்த அறிவிப்பை பாலிவுட்டின் பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் வெளியிட்டுள்ளார்.
கார்கில் போரின் போது உயிர்த் துறந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி அந்த படம் உருவாக இருப்பதாகவும்,அதில் விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீவஸ்தவா கதை எழுதுகிறார்.அடுத்த வருடம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகோவை சிந்தாமணி சந்திப்பில் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு!
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்த மிகப்பெரிய முன்னேற்றத்தை வழிநடத்தும் பிராண்டாக அடிசியா தொடர்ந்து பயணிக்கும் – மணிகண்டன்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் அதிநவீன கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தளம் துவக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர்
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை