• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாரி 2 படப்பிடிப்பின் போது காயமா தனுஷ் விளக்கம் !

June 23, 2018 தண்டோரா குழு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மாரி 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும், டோவினோ தாமஸ்க்கும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக தனுஷுக்கு வலது காலிலும், இடது கையிலும் காயம் ஏற்பட்டது.

இதனால், அதிர்சியடைந்த படக்குழுவினர் உடனடியாக தனுஷுக்கு முதலுதவி அளித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் தனுஷுக்கு படுகாயம் ஏற்பட்டு விட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“என் அன்புக்குரிய ரசிகர்களே, எனக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. நான் தற்போது நலமாக இருக்கிறேன். உங்கள் அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி. நான் என்றும் உங்களது அன்பிற்கு கடமைப்பட்டிருக்கிறேன். என் பலத்திற்கு தூண் போன்று இருக்கும் உங்களை மிகவும் நேசிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தனுஷின் இந்த டிவிட்டைப் பார்த்தப் பிறகு தான் அவரது ரசிகர்கள் சமாதானம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க