• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மணிரத்னமின்  `செக்க சிவந்த வானம்’ படப்பிடிப்பு துவங்கியது

February 12, 2018 தண்டோரா குழு

காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ்,  ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராய் என பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளார்.

மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு `செக்க சிவந்த வானம்’ என்று தலபை்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில்,இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இரண்டு மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. பின்னர் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் முடிந்து வருகிற ஜூலை மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

மேலும் படிக்க