நடிகை சமந்தாவும் நடிகர் நாகசைதன்யாவும் விரைவில் ஹைதராபாத்தில் திருமணம் செய்யவுள்ளார்கள். இதற்கிடையில்,சமந்தா தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஷியாக நடித்து வருகிறார்.
தமிழில் விஜய், விஷால், விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து வரும் சமந்தா ராம் சரண் ஜோடியாக தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகை சமந்தா.
இதற்கிடையில் நடிகை சமந்தா தனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படி சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்கு செல்வதாக இன்ஸ்டாகிராமில் ஒரு ஃபோட்டோவை பதிவிட்டிருந்தார். அந்த ஃபோட்டோவில் அவரது பிகினி உடை இருந்ததால் பலரும் அவரை விமர்சித்து கருத்து பதிவிட்டனர்.
இதனால் கோபமடைந்த சமந்தா, ” ஒரு பெண் எப்படி உடை அணிகிறாள் என்பதை வைத்து தான் நீங்கள் ஒருவரை மதிப்பிடுவீர்களா? உங்களது எண்ணங்களை நினைத்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன் நீங்களும் வெட்கப்படவேண்டும்” என பதிலளித்துள்ளார்.
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு