• Download mobile app
24 Oct 2025, FridayEdition - 3544
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலியை மிஞ்சும் 2.0! தாறுமாறாக எகிறும் பட்ஜெட்!!

July 5, 2017 tamilsamayam.com

ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வரும் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 பட்ஜெட் 400 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் 2.0 திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. படத்தின் 75 சதவீத படப்பிடிப்புகள் முடிவுற்ற நிலையில் பட்ஜெட் அதிகரித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட 2.0 தற்போது 400 கோடி ரூபாயை தொட்டுள்ளதாம்.

அக்ஷய் குமாரின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினி, எமி ஜாக்சன் டூயட் உட்பட ரஜினி இன்னும் 35 நாட்கள் நடிக்க வேண்டியுள்ளது. படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருவதால் அதற்கு உரிய லைட், செட் அமைக்க அதிக செலவானதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். படப்பிடிப்பு முடியும் போது பட்ஜெட் 350 கோடியை தொட்டிருக்கும் என்றும், அதன்பின்னர் கிராபிக்ஸ் வேலைகளுக்கு 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவே 400 கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகளுக்கு தனியாக செலவாகும் என்று சொல்கின்றனர். படத்தை 3டி தொழில்நுட்பத்தில் திரையிட வேண்டும் என்பதால் லைக்கா நிறுவனம் 300 திரையரங்குகளை 3டி தொழில்நுட்பத்தில் மாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க