• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் ஜெய் கார் விபத்து குறித்து வெங்கட்பிரபுவின் பதில்

September 22, 2017 தண்டோரா குழு

வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அண்மையில் சென்னை திரும்பினார் நடிகர் ஜெய்.

இந்நிலையில், நேற்று இவர் ஓட்டிய கார் சென்னை அடையாறு பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கார் விபத்தில் சிக்கிய போது நடிகர் ஜெய் நிதானம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் கார் சேதமடைந்துள்ளது. ஆனால் ஜெய் காயம் ஏதுமில்லாமல் தப்பினார்.

மேலும், காரில் ஜெய்யுடன் நடிகர் பிரேம்ஜி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், டுவிட்டரில் இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் ரசிகர் ஒருவர் உங்கள் தம்பி பிரேம்ஜி குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா? என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் அதற்குள் பார்டி படத்தின் பிரோமோசனை ஆரம்பித்துவிட்டிற்களா என இது வெறும் வதந்தி என்பது போல் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க