• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவிற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

June 30, 2018 தண்டோரா குழு

பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் அவன்-இவன். ஆா்யா, விஷால் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை தவறாக சித்தரித்ததாக படம் வெளியானபோதே சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நடுவா் நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக நடிகா் ஆா்யா மற்றும் இயக்குநா் பாலா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அவா்கள் ஆஜராகவில்லை.

பின்னர், பல்வேறு காலகட்டங்களில் நடந்த விசாரணையின்போது ஆஜராகுமாறு உத்தரவிட்டும் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில், நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு எதிராக அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க