• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ் ராக்கர்ஸ் இணையதள உரிமையாளர்கள் 4 பேர் கைது

March 14, 2018 தண்டோரா குழு

புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதள உரிமையாளர்கள் 4 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

புதிய திரைப்படங்கள் வெளியான அன்றே அது இணையதளத்திலும் திருட்டு தனமாக சிலர் பதிவேற்றம் செய்து வந்தனர். இதில் முக்கிய இணையதளம் தமிழ்ராக்கர்ஸ் என்ற இணையதளம். இந்த இணையதளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகும் புதிய திரைப்படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்து வந்தது. இதனால், தயாரிப்பாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு திருட்டு வீடியோ வெப்சைட்டுகளை தடை செய்தபோதிலும், தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை தடை செய்ய முடியவில்லை. வேறு பெயர்களை மாற்றிக்கொண்டாவது அந்த இணையதளம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், கேரள வீடியோ பைரசி பிரிவு போலீசார், நெல்லை மற்றும் விழுப்புரத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை நிர்வகித்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதில், உரிமையாளரும் அடங்கும் என்கிறது கேரள காவல்துறை வட்டாரம்.

மேலும் படிக்க