• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்!

February 14, 2018 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் தற்போது மாரி2, என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

பவர் பாண்டி படத்தை இயக்கத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்டத்தில் தனுஷும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிக்க நாகார்ஜுனா, ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக இருவரும் நடிக்க முடியாததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட நடிகர் சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் பெங்களூரு சென்ற தனுஷ் அவரிடம் கதையை கூறி ஒப்புதல் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.சுதீப் இதற்கு முன் ‘நான் ஈ’, ‘புலி’ போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க