ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருவதால்,தனது டிவிட்டர் கணக்கை டி-ஆக்டிவேட் செய்துள்ளார் நடிகை திரிஷா.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் காரணமான பீட்டா அமைப்பின் ஆதரவாளர் என்று கூறி,சமூக வலைத்தளங்களில் நடிகை திரிஷா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து “நான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்ததில்லை.ஆனால் என்னை பற்றி பலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.”என திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர்,”நான் ஒரு தமிழன்.நான் பீட்டாவை ஆதரிக்கிறேன்.எவ்வளவு பழமையான பாரம்பரியமாக இருந்தாலும்,மிருகங்கள் வதைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது.”என திரிஷா மற்றொரு டிவீட் செய்திருந்தார்.அதன் பின்னர்,”என்னுடைய டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள்.பீட்டாவுக்கு ஆதரவாக நான் எந்த டிவீட்டும் போடவில்லை.”என ஜகா வாங்கினார்.
இருப்பினும் அவருக்கு எதிரான வசவுகள் சமூக வலைத்தளங்களில் குறையவில்லை.எனவே தனது டிவிட்டர் கணக்கை தற்காலிகமாக மூடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.”அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும் வரை,எனது டிவிட்டர் கணக்கை மூடுகிறேன்.”என திரிஷா தெரிவித்துள்ளார்.இதன்படி தற்போது திரிஷாவின் டிவிட்டர் கணக்கு செயல்படவில்லை.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்