• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலா டீசரில் திருநெல்வேலி தமிழில் கலக்கிய ரஜினி

March 2, 2018 tamilsamayam.com

இன்று வெளியிடப்படுவதாக இருந்த காலா திரைப்படத்தின் டீசரை, நேற்று நள்ளிரவே நடிகர் தனுஷ் வெளியிட்டதால், ரசிர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கபாலி’. மலேசிய வாழ் தமிழர்களின் வாழ்வை சித்தரிக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டிருந்தது. ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக ரஜினி நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதையடுத்து பா.ரஞ்சித், ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். ‘காலா’ என்ற பெயரில் உருவாகி இப்படத்தை, தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

காலா திரைப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடப்படும் என்று முதலில் நடிகர் தனுஷ் அறிவித்தார். இதனையடுத்து, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை ஒட்டி, நாளை (மார்ச் 1) வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட காலா திரைப்படத்தின் டீசர், நாளை (மார்ச் 2) தேதி வெளியிடப்படும் என்று தனுஷ் டுவீட் செய்தார்.

இந்நிலையில், நேற்று இரவு 10.40 மணியளவில் காலா திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ், தனது வொண்டர் பார் தயாரிப்பு நிறுவனத்தின் யூடியுப் சேனலில் வெளியிட்டார். மேலும், இது குறித்த அறிவிப்பையும் டுவிட்டரில் வெளியிட்டார். டீசர் வெளியான சில நிமிடங்களிலே ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.

டீசரில் நடிகர் ரஜினிகாந்த் திருநெல்வேலி தமிழில் வசனத்தை பேசியுள்ளது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே படத்தின் திரைக்கதை நெல்லை மாவட்டத்துக்கு தொடர்புடையது என்று நடிகர் ரஜினிகாந்த தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க