• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கார்த்திக் நரேனின் அடுத்த படம்  ‘ நாடக மேடை ‘

February 15, 2018 தண்டோரா குழு

‘துருவங்கள் 16’ படத்தின் வெற்றி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்குநர் கெளதம் மேனனின் ஒன்றாக பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘நரகாசுரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அர்விந்த் சாமி, ஸ்ரேயா,சுந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. விரைவில் அப்படம்  திரைக்குவரவுள்ளது.

இந்நிலையில், தனது மூன்றாவது படம் குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நாடக மேடை என அப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இன்றைய நவீன சமூகத்தில் இளைஞர்களின் கண்ணோட்டம் எப்படி உள்ளது என்பதை பற்றிய படம் இது கார்த்திக் நரேன் கூறியுள்ளார். விரைவில் இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

மேலும் படிக்க