• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இணையதளத்தில் படங்களை வெளியிடும் தமிழ் கன் அட்மின் கைது

September 12, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமா பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனை இணையத்தில் திருட்டுத்தனமாக படம் வெளிவருவது தான்.இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

இதற்கிடையில், தொடர்ந்து முதல் நாளிலேயே படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில்,திரைப்படங்களை சட்டத்துக்குப் புறம்பாக இணையதளத்தில் பதிவேற்றும் ‘தமிழ்கன்’ நிர்வாகியைப் பிடித்த திரைத்துறையினர், அவரைத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாணையில், அவர் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பதும் 100 ஐ.பி முகவரிகள் மூலம் சட்டவிரோதமாக ‘தமிழ்கன்’ இணையதளத்தில் திரைப்படங்களில் பதிவேற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காவல்நிலையத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்ட திரைப்பட சங்க நிர்வாகிகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.கடந்த 6 மாதங்களாக கௌரி சங்கரை சென்னைக்கு வரவழைக்க திட்டமிட்டு, திரைத்துறையினர் அவரை வசமாக பிடித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க