• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜீத் ஓகே சொன்னா நாளைக்கே ரெடி: ஏ.ஆர்.முருகதாஸ்!

September 20, 2017 tamilsamayam.com

தல அஜீத் ஒகே சொன்னா நாளைக்கே படப்பிடிப்புக்கு ரெடி என்று பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவே வியந்து பார்க்கும் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் அஜீத். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அஜீத் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. தயாரிப்பாளருக்கு போதுமான லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், அஜீத்தை வைத்து இயக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார். தற்போது வரை அந்த முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ், ‘ஸ்பைடர்’ படத்தை அடுத்து நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில் “அஜீத் சார் எப்போ ஓகே சொன்னாலும் அடுத்த நாளே படப்பிடிப்புக்கு தயாராக இருக்கிறேன். அவருக்கான கதையும் தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க