March 13, 2019
தண்டோரா குழு
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கேஜேஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் ஹீரோ என்று பெரியரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே தலைப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படமும் இன்று பூஜையுடன் துவக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் தமிழிலும் வெளிவர இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ‘ஹீரோ’ என்ற தலைப்பில் எப்படி 2 படம் வெளியாகும் என கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படத்தின் தலைப்பை யார் மாற்ற போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த இரண்டு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் ‘ஹீரோ’ தலைப்பை உபயோகப்படுத்த அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.