August 11, 2020
தண்டோரா குழு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு ஆகஸ்ட் 9-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது #GreenIndiaChallenge என்ற சவாலில் பங்கேற்றார் மகேஷ் பாபு. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும்.
இதனையடுத்து, மரக்கன்றை நட்ட
மகேஷ் பாபு ட்விட்டர் தளத்தில் வீடியோ வெளியிட்டார். அதில்,”எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி கிடையாது. நான் #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்தச் சங்கிலி, எல்லைகளைக் கடந்து தொடரட்டும்” என்று தெரிவித்தார் .
இந்தநிலையில், இன்று நடிகர் விஜய்
மகேஷ் பாபுவின் இந்தச் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றை நட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும், “இது உங்களுக்காக மகேஷ்பாபு அவர்களே. பசுமையான இந்தியாவும், நல் ஆரோக்கியமும் கிடைக்க என் வாழ்த்துகள். நன்றி. பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.