• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘பாகுபலி 2’ இமாலய வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபாஸ்

May 4, 2017 tamilsamayam.com

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான ‘பாகுபலி 2’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், நடிகர் பிரபாஸ் ரசிகர்களின் பேராதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உலக சினிமாவில் இந்திய சினிமாவுக்கும் கவுரம் தேடித் தந்துள்ள ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் கதாநாயகன் பிரபாஸ், தனது 5 ஆண்டுகால கடுமையான உழைப்பின் வெற்றியை தற்போது அமெரிக்காவில் கொண்டாடி வருகிறார். நெருங்கிய நண்பர்களுடன் அமெரிக்காவில் விடுமுறை கொண்டாடி வரும் பிரபாஸ், குடும்பத்தார், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரபாஸ் தனது அறிக்கையில், இந்த 5 ஆண்டுகாலம் எனக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்து அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவில்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்க முடியாது. அனைவருக்கும் அன்பு கலந்த எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

‘பாகுபலி 2’ திரைப்படத்தில் நேர்த்தியான, கம்பீரமான நடிப்பினை வெளிப்படுத்திய பிரபாஸ்க்கு ரசிங்கர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ‘பாகுபலி 2’ வெளியான முதல் நாளிலேயே ரூ.121 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படம் விரைவில் ரூ.1000கோடி வரை வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க