March 26, 2019
தண்டோரா குழு
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கொண்ட நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்த சர்ச்சையான கருத்தை பதிவு செய்தார். இதனையடுத்து ராதாரவிக்கு விக்னேஷ் சிவன், ராதிகா, சின்மயி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் ராதாரவி பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு நடிகர் ராதாரவி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், நடிகர் ராதாரவியின் சர்ச்சையான கருத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்
தான் செய்தது சரி என நிரூபிக்க போராடுகிறார் ராதாரவி! நயன்தாராவின் சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன். மன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.