• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

எனக்கு பேய் பயம் போய்விட்டது – ஸ்ரீதிவ்யா

May 17, 2017 தண்டோரா குழு

அறிமுக இயக்குனர் ஐக் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. காமெடியுடன் கூடிய திகில் படமான இதில், ஹோம்லி கேரக்டரில் தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.

பேய் படம் என்றால் எல்லோருக்கும் ஒருவித பயம் இருக்க செய்யும்.அதுபோல தான் பொதுவாகவே பேய்ப் படங்கள் பார்ப்பதென்றால் ஸ்ரீதிவ்யாவுக்கு அவ்வளவு பயமாம். அதனால், பேய்ப் படங்கள் பார்ப்பதையே தவிர்த்து விடுவாராம்.

ஆனால், இந்தப் படத்தில் நடித்தபிறகு பேய் மீதான பயம் போய்விட்டதாம். காரணம்?“எனக்கு முன்னாடி தான் பேயாக நடிப்பவருக்கு மேக்கப் போட்டார்கள். இந்தப் படத்தின் மூலம் பேய்ப் படங்கள் எப்படி எடுக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டேன். அதனால், எனக்கு பயம் போய்விட்டது” என்றார்.

மேலும் படிக்க