• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உடையை வைத்து மதிப்பிடாதீர்கள் நடிகை பிரியங்காவுக்கு சன்னிலியோன் ஆதரவு

June 5, 2017 தண்டோரா குழு

இந்தி நடிகை பிரியங்காசமீபத்தில் பெர்லின் சென்றபிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது கால் தெரியும் படி உடை அணிந்து, பிரதமர் முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசினார். இது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

ஆனால்,அதில் தவறு இல்லை. என்பது போன்று பிரியங்கா சோப்ராவும், அவருடைய அம்மாவும் கால் தெரியும் படி உடை அணிந்திருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டார்.இதையடுத்து, பிரியங்கா சோப்ராவின் இந்த செயலுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரியங்கா சோப்ராவுக்கு கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, மிகவும் ஸ்மார்ட் ஆன மனிதரை தான் நாம் இந்திய பிரதமராக தேர்வு செய்து இருக்கிறோம். அவர் மனதில் பட்டதை பேசக்கூடியவர். பிரியங்கா உடை அணிந்து சென்றதில் பிரச்சினை இருந்திருந்தால் பிரதமர் நிச்சயம் கூறி இருப்பார்.

ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை என்றார். மேலும், எனக்கு பிரியங்காவை நன்றாக தெரியும்.

அவர் மக்களிடம் நல்ல விதமாக பழகுபவர். சமூகத்துக்கு உதவி செய்பவர். எனவே, அவருடைய நடவடிக்கைகளை வைத்து அவரை மதிப்பிடலாமே தவிர உடையை வைத்து அல்ல” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க