• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆரம்பித்த முதல்நாளே தண்ணீரால் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரச்சனையா !

June 24, 2019 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமலஹசான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக ஆரம்பமானது.

இதில் சேரன், ஜாங்கிரி மதுமிதா, சாண்டி மாஸ்டர், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, செரின், சாக்ஷி அகர்வால், மலேசியாவை சேர்ந்த மாடல்கள் இருவர், பருத்திவீரன் சரவணன், அபிராமி வெங்கடாச்சலம், ரேஷ்மா, வனிதா விஜயகுமார் இலங்கை
செய்தி வாசிப்பாளர் லூசியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.முதல் இரண்டு சீசனை விட இந்த முறை வீட்டில் நிறைய மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. குறிப்பாக ஓவியங்களும் புகைப்படங்களும். இதில் கமலின் விருமாண்டி புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கைளை பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது. அதில், தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக பிக்பாஸ் தெரிவிக்க அனைவரும் கைதட்டி வரவேற்கின்றனர். அப்போது பேசிய பாத்திமா பாபு, பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற நிலை வந்திருப்பது ஒரு அவலம் அதை கைதட்டி வரவேற்க வேண்டியதில்லை என்கிறார்.

உடனே சேரன், தண்ணீர் பயன்படுத்துவதற்காக ஒரு அளவீடு கொடுக்கப்பட்டிருப்பது. தண்ணீரின் சிக்கனத்தை கொண்டுவந்ததற்காகத் தான் கைதட்டி வரவேற்றோம் என்கிறார். ஆரம்பித்த முதல்நாளே தண்ணீரால் வீட்டுக்குள் பிரச்னை எழுந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

மேலும் படிக்க