• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அண்ணா ஒரு போட்டோ எடுக்கலாமா – இளம் நடிகருடன் விஜய் எடுத்த செல்பி

September 9, 2019 தண்டோரா குழு

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 64-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இதற்கிடையில், மெர்சல் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யுடன் நடிகர் அப்துல் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து நடிகர் அப்துல், ‘நான் விஜய்யின் கேரவன் பக்கத்தில் நின்றிருந்தேன், அவர் கேரவனில் இருந்து இறங்கி வந்து காரில் ஏறிச் சென்றார். சில தூரம் சென்ற பிறகு அவர் காரை நிறுத்திவிட்டு என்னை அழைத்தார். என்ன ஆச்சு, எதுவும் கேட்கனுமா இல்ல சொல்லனுமா என்று என்னிடம் கேட்டார். நான் உங்க கூட ஒரு போட்டோ எடுக்கனும்னு சொன்னேன். அதற்கு அவர் படமே நடிச்சாச்சு அப்புறம் என்ன என்று கேட்டார். அதற்கு நான் இல்ல அண்ணா கெட் அப்-ல இருக்கு என்றேன். பிறகு எனக்காக கிழே இறங்கி வந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க