• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி துவக்கம்

March 5, 2022 தண்டோரா குழு

கோவையில் பிரபலமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், வீட்டு அலங்கார பொருட்களுக்கான ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஓட்டல் அரங்கில் துவங்கியது.

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற , பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி தொடர்ந்து ஏழாவது ஆண்டாக தமது விற்பனை கண்காட்சியை கோவை அவினாசி சாலையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஓட்டல் அரங்கில் துவங்கியது.

மார்ச் 5 முதல், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், நகைகளுக்கென நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்ப்பட்டுள்ளன. முன்னதாக இக்கண்காட்சியினை கண்காட்சியின் முக்கிய வாடிக்கையாளர்கள் திருமதி முருகம்மாள் சுந்தரவடிவேலு, சுஜா அருண், வினய் மேனன் ஆஷா ஜெமினி, நிகிதா பிரபு உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில், இங்கு ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக டில்லி,ஜெய்ப்பூர்,புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக ஆடை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், இந்தியாவின் பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல்,வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் அழகுக்கலை பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள், முக அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றிற்கான தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க