• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈமூ கோழி மோசடி – இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; 55 லட்சம் அபராதம்

September 23, 2021 தண்டோரா குழு

ஈமூ கோழி மோசடி-ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் 55 லட்சம் அபராதம் விதித்து கோவை முதலீட்டார்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஈமூ கோழியில் முதலீடு செய்ய கோரி விளம்பரம் செய்து 40 பேரில் பணம் பெற்று மோசடி செய்ததாக,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குமார்(49),கார்த்திகேயன் (51). இருவர் மீது கோவை பெருளாதார குற்றப்பிரிவில் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் குமார், மற்றும் கார்த்திகேயன் இருவரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் 55 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க