• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வடக்கு மண்டலத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

September 2, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் மக்கும் குப்பை கழிவுகளை கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வரும் மையத்தை பார்வையிட்டு மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

பின்னர் மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்களா? என பார்வையிட்டார்.

தொடர்ந்து அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுகாதாரமான முறையில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? என பார்வையிட்டார்.பின்னர் பீளமேடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரித்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், வடக்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க