• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூர் அருகே மாட்டிறைச்சி விற்கக் கூடாது என வியாபாரியை மிரட்டிய வட்டாட்சியர் பணியிட மாற்றம்.!

June 29, 2021 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆருகே மாட்டிறைச்சி விற்கக்கூடாது என மாட்டிறைச்சி உரிமையாளரை எச்சரித்த வட்டாட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கானாங்குளம் பகுதி உள்ளது.
இப்பகுதியில் வேலுச்சாமி என்பவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். இதற்கிடையில், அவரது இறைச்சி கடைக்கு இரவு நேரத்தில் சென்ற அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச் செல்வன், ஆடு, கோழி இறைச்சி விற்பனை செய்யலாம், மாட்டிறைச்சி விற்கக்கூடாது என வேலுச்சாமியை எச்சரித்தார்.

அப்போது, மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை, அனைவரும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதை நிறுத்தினால் தானும் நிறுத்துவதாக வேலுச்சாமி கூறியுள்ளார். இதற்கு வேலுச்சாமியை மட்டும் சொல்லவில்லை, இந்த பகுதியில் அதிகமாக நடப்பதாகவும், மாடுகள் வதைக்கப்படுவதாக இங்கு புகார் வந்ததால் தான் மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது என தமிழ்செல்வன் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இதையடுத்து, பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்திற்கு தமிழ்செல்வன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க