• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜன்தன் கணக்குகளில் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும்-இந்திய ரிசர்வ் வங்கி

November 30, 2016 தண்டோரா குழு

கிராம மக்கள் மோசடியாட்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஜன்தன் வங்கி கணக்குகளிலிருந்து மாதம் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜன்தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்கமுடியும்.
கே.ஒய்.சி. இல்லாத (அதாவது வாடிக்கையாளர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படாத கணக்குகள்) அல்லது டெபாசிட் தொகையை எடுப்பதில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஜன்தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு ரூ. 5000 மட்டுமே எடுக்க முடியும்.

கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் அதை வெள்ளையாக்க ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் செய்து வருவதாகப் பரவலாகப் புகார்கள் எழுந்தன. அத்தகைய முயற்சிகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் அப்பாவி கிராம மக்கள் யாரிடமும் சிக்கி பிநாமி சொத்து பரிவர்த்தனை மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க