• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்து கோவில்களில் திமுக எடுக்கும் நடவடிக்கைகள் சந்தேகத்தை உருவாக்குகிறது – வானதி சீனிவாசன்

June 14, 2021 தண்டோரா குழு

இந்து கோவில்களில் திமுக எடுக்கும் நடவடிக்கைகள் சந்தேகத்தை உருவாக்குவதாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனவும், பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து கோவை தெற்கு தொகுதியின் எம் எல் ஏ வும் பாஜக வின் அகில இந்திய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

அறநிலையத்துறை அமைச்சர் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பயிற்சி அளிப்பது , பெண்களும் அர்ச்சகராலம் என சொல்லியிருக்கிறார்.விஷ்வ ஹிந்து பரிஷத் நீண்ட காலமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சொல்லி வருவதாகவும், தமிழில் அர்ச்சனை தற்போது நடைபெற்று வருவதாகவும், பெண்கள் மேல்மருவத்தூர், மற்றும் சமுதாய கோவில்களில் பூஜை செய்து வருகின்றனர். இதில் தமிழக அரசு புதிதாக எதையும் செய்யவில்லை என்றார்.

உச்ச மற்றும் உயர் நீதிமன்ற உத்திரவின்படி ஆகம கோவில்களில் ஆகம விதிப்படி தான் பூஜை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதில் பக்தர்களின் உணர்வு, கோவில் நிர்வாகத்தின் ஆலோசானையின் படி கேட்டு, அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி நடக்க வேண்டும் என்றார்.

திமுக இந்துக்களுக்கும் , இந்து கடவுள்களுக்கும் எதிரானவர்கள் என தான் சொல்லவில்லை எனவும், அதன் தலைவர்களே சொல்லி இருப்பதாக கூறினார்.இந்து சமய அற நிலையத்துறையில் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தன்னிச்சையானதா, உண்மையானதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு உண்மையாகவே இந்து கோவில்களின் மீது அக்கறை இருந்தால் , கோவில் சொத்துக்ள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்றார். மேலும் கோவில் சொத்துக்களை பாதுக்காக்க ஆதினங்களின் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க