• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள வீதியில் சுமார் 50 பேருக்கு கொரோனா தொற்று

June 9, 2021 தண்டோரா குழு

நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள வீதியில் சுமார் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீதியே சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இருந்தபோதும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கோவையில் மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கோவையில் கொரோனா பாதிப்பு 22 சதவிகிதம் குறைந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து வீதிவீதியாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மேற்கு புதூர் பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 658 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 50 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வீதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.இதனால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க