June 8, 2021
தண்டோரா குழு
பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தென்னாப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபின். இவர் மீது ரூ.60 லட்சம் பண மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பான வழக்கு 2015-ஆம் ஆண்டு முதல் டர்பன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.