• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 200 மரக்கன்றுகள்

June 3, 2021 தண்டோரா குழு

கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சராகம், கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 200 மரக்கன்றுகளை நட்டியது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினம் கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சராகம், கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியுடன் இணைந்து அனுசரித்தது. இதில் இவரின் ஞாபகமாக 200 மரக் கன்றுகளை இக் கல்லூரி வளாகத்தில் நட்டினார்கள்.

இம்மரம் நடும் நிகழ்ச்சியில், இக் கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர். எஸ்.மலர்விழி முன்னிலை வகிக்க, கோவை, வனக்கோட்டம் உதவி வனப் பாதுகாவலர் செந்தில்குமார் தலைமையில் நடப்பட்டது.

இதில் இக் கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்.கே.சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனிவாசன் ஆளவந்தார்,வனச்சரக அலுவலர், கல்லூரியின் நிர்வாக அலுவலர் கலந்துகொண்டனர்.

இதில் வேம்பு, புங்கன், மகாகனி உட்பட பல்வேறு வகையான மரங்கள் நடவு செய்யப்பட்டது. இதை முழுமையாக வளர அனைத்து பராமரிப்பினையும் செய்யவுள்ளது. மேலும் இக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக, நடிகர் விவேக் போன்ற பிரபலமானவர்கள் இக் கல்லூரியில் நட்டிய அனைத்து மரங்களும் முழுமையாக வளர்ந்து பராமரிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க