• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

June 1, 2021 தண்டோரா குழு

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தம் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தைக் கிளப்பியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், அரசியல் அமைப்புகள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில்,இந்த கொரோனா காலகட்டத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்திருத்தை மத்திய அரசு அமுல்படுத்துவதாக தெரிவித்து இன்று நாடு முழுவதும் இன்று எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை கோட்டைமேடு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராவகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராக பதாகைகள் வைத்தபடி கோசங்களை இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ஹாஜாஹுசேன்,

நாடு முழுவதும் கொரொனாவால் உயிரிழந்து வரும் மக்களை பாதுகாக்காமல் குடியுரிமை சட்டத்தை அமுல்படுத்துவதில் நோக்கமாக மத்திய அரசு உள்ளதாகவும், அனைவரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் ஒதுக்கிவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கோவையில் 500இடங்களில் போராட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க