• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓ.என்.வி. இலக்கிய விருதை திருப்பித் தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

May 29, 2021 தண்டோரா குழு

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்படுவதாக ஓ. என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது. இதற்கிடையில், இதற்கு நடிகை பார்வதி, பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விருதை மறுபரிசீலனை செய்வதாக ஓ. என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது.

இந்நிலையில், ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன். சர்ச்சைகளுக்கு இடையே இந்த விருதை பெறுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

எனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள
முதல்வரின் நிவாரண நிதிக்கு அளியுங்கள். விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம்.
நான் மிக மிக உண்மையாக இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப்பார்க்கத் தேவையில்லை என கூறியுள்ளார்.

மேலும் படிக்க