• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் – அதிமுக எம்.எல்.ஏக்கள் மனு

May 27, 2021 தண்டோரா குழு

கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று, கோவை மாவட்ட தொகுதியில் உள்ள 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் நாகராஜிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில், நேற்று சென்னையை விட கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று, முன்னாள் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உள்ளிட்ட 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த சட்ட மன்ற உறுப்பினர்கள் கூறுகையில்,

தமிழகத்தில் சென்னையை புறந்தள்ளி கோவை மாவட்டம், கொரோனா தொற்று பாதிப்பில் முதன்மை மாவட்டமாக உள்ளது. பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை முறையாக பின்பற்றுவது, ஒருபுறம் இருந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் தடுப்பு நடவடிக்கைகளில் குறைபாடுகள் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியதோடு, கொரோனா தடுப்பு பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தியதால் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தற்போது கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருந்தாலும் மக்களுக்கு, சேவைகள் செய்வதை கூட மேலிடத்தில் கேட்டு அதற்கான ஆணை வந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் நிலையில் உள்ளதால் தடுப்பு பணிகளில் உடனுக்குடன் ஈடுபட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் முடியவில்லை என என்றனர்.இதனால் கூட கோவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து தடுக்க, கோவை ஆட்சியரை சந்தித்து நடவடிக்கையை தீவிரப்படுத்த மனு அளித்துள்ளோம் எனவும் கோவையில் நேற்று 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மின் மயனங்களில் இடமில்லாத நிலை உள்ளது. ஆக்சிஜன் படுக்கை அமைக்க அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது இது தொடர்பாக மனு அளித்தோம். மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அதிக வாகனங்களை பயன்படுத்தி கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும். ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும், கருப்பு பூஞ்சை நோய் பரவிக்கொண்டுள்ளது. மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவையில் 21 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உள்ளது எனவும் ஒரு வீதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அதற்கு உரிய அதிகாரியை நியமித்து அவர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்க வலியுறுத்தியுள்ளதாகவும்தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சையை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த வேண்டும்.இதற்காக தனி அலுவலரை நியமிக்க வேண்டும்.

தடுப்பூசியை கூடுதலாக வரவைக்க வேண்டும் என கூறிய அவர், கடந்த ஆட்சியில் சிறந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போல் இந்த அரசும் செய்ய வேண்டும் என்பது ஒரு அறிவுரையாக முன் வைக்கிறோம்.
தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்த வேகம் பத்தாது. மக்களுக்கு உதவி செய்ய அனுமதி கேட்கிறோம். ஆனால் மறுக்கிறார்கள். அம்மா உணவகத்தில் 3 மாதம் இலவசமாக உணவு வழங்கினோம்.அதனை இந்த அரசு செய்ய வேண்டும். இல்லை யென்றால் நாங்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம். எங்களை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்.

அனைத்து பகுதிகளிலும் ஆக்சிஜன் செரிவூட்டிகளை வாங்க எம்.எல்.ஏ நிதியை தருவதாக கூறினோம். இதுவரை பதில் இல்லை. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதி அப்போது தான் கொரோனா குறையும். கோவைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.ஆர்.ஜெயராம், அருண்குமார், அமுல் கந்தசாமி, தாமோதரன், கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க