• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நண்பனை இழந்ததால் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கிய நண்பர்கள் !

May 27, 2021 தண்டோரா குழு

கோவையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நண்பர் உயிரிழந்ததால் அவரது நண்பர்கள் இணைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கென ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளனர்

கோவையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் போதிய ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கோவையை அடுத்த அசோகபுரம் பகுதியில் ஆக்சிஜன் சரியான நேரத்தில் கிடைக்காததால் அந்த பகுதியை சேர்ந்தவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்,அவரது நண்பர்கள் இணைந்து ஆக்சிஜன் வதியுடன் கூடிய இரண்டு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி உள்ளனர். நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் துவங்கியுள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவை துடியலூர்,அசோகபுரம் ,என அந்த பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் துவக்கி உள்ளதாகவும்,மேலும் தற்போதையை சூழலில்,ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், அரசை குறை கூறாமல்,பொதுமக்களாகிய நம்மால் ஆன இது போன்ற உதவிகளை செய்வதால், உயிரிழப்புகளை தடுக்க முடியும் என நண்பர்கள்அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ் தேவையை எதிர்பார்க்காமல்,ஊர் பொதுமக்களே ஆம்புலன்ஸ் சேவை துவக்கியுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க