• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திமுக மாநகர் கிழக்கு மாவட்ட 22 வது வட்டக்கழகம் சார்பில் தினமும் ஆயிரம் பேருக்கு மதிய உணவு

May 26, 2021 தண்டோரா குழு

ஒண்றிணைவோம் வா எனும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கோவை தி.மு.க. மாநகர் கிழக்கு மாவட்ட 22 வது வட்டக்கழகம் சார்பாக,தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்கள் என ஆயிரம் பேருக்கு தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.குறிப்பாக இதனால் ஏற்பட்டுள்ள முழு ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு கழக தொண்டர்கள் ஒண்றிணைவோம் வா என ஆதரவற்றோர்களுக்கு உதவ ஆணையிட்டுள்ளார்.

இந்நிலையில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க.22 வது வட்ட கழகம் சார்பாக சாய்பாபா காலனி,22 வார்டு பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தெருவோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. வர்த்தக அணி துணை அமைப்பாளர் காலனி வினோத் ஆனந்த் தலைமையில் ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில்,சமூக விலகலை கடைபிடித்து, அந்த பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சகல சன்மார்க்க ஆலயத்தின் ஆயர் சார்லஸ் சாம்ராஜ் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். தொடர்ந்து என்.எஸ்.ஆர். சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருவோரம் வசிப்போர், ஆதரவற்றோர் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இதில், தொண்டரணி துணை அமைப்பாளர் தளபதி மோசஸ், எஸ்.என். ரவி, பாஷாபாய், பகவான், பிரவீன், அசோக்,, மாரியப்பன், ராஜேஷ், சபரி , பரணி, ராம், சக்தி, கண்ணன், ஹரி, பேட்டை முருகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க