• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜி.எஸ்.டி.யில் உள்ள சிக்கல்களை ஜி.எஸ்.டி. கவுன்சில் கவனத்துக்கு எடுத்து சென்று தீர்வு காண வேண்டும் – காட்மா கோரிக்கை

May 26, 2021 தண்டோரா குழு

ஜி.எஸ்.டி.யில் உள்ள தொழில்களை
பாதிக்கும் சிக்கல்களை, மத்திய அரசு மற்றும் ஜி.எஸ்.டி.கவுன்சில் கவனத்துக்கு எடுத்து சென்று தீர்வு காண வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு காட்மா தலைவர் சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் லேபர் சார்ஜ் அடிப்படையில் ஜாப்ஒர்க்கில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தாமதமாக ஜி.எஸ்.டி. வரி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு தற்போது விதிக்கப்படும் வட்டி மற்றும் அபராத தொகை மிகவும் அதிகமாக உள்ளது. இதை நீக்க வேண்டும்.ஒரு பொருளை விற்பனை செய்த விற்பனையாளர் பிரதி மாதம் 11-ம் தேதிக்குள் தங்களது ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், பொருளை வாங்கிய வாடிக்கையாளர் செலுத்திய ஜி.எஸ்.டி. வரியை உள்ளீட்டு வரியாக எடுக்க இயலாது என்ற விதிமுறை திரும்ப பெறப்பட வேண்டும்.

சில பொருட்களை உற்பத்தி செய்யும்போது அதற்கான மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதம் அதிகமாகவும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும்போது, அதற்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறைவாகவும் உள்ளது தொழில் முனைவோர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்யாமலோ அல்லது செலுத்தாமலோ உள்ள தொழில் முனைவோர், தங்களது ஜி.எஸ்.டி. கணக்கு முடக்கப்பட்ட 30 நாட்களுக்குள் முழு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை 18 சதவீத வட்டியுடன் செலுத்தாவிடில், தீர்ப்பாயத்தில் முழு வரி நிலுவையை உள்ளீட்டு வரியை கழிக்காமல் முழுவதுமாக 18 சதவீத வட்டி மற்றும் அலுவலர்கள் நியமிக்கும் அபராத தொகையுடன் முழுவதும் செலுத்திய ஆவணத்துடன் மேல்முறையீடு செய்து, தீர்ப்பு கிடைக்கப்பெற்ற பிறகே, தங்களது ஜி.எஸ்.டி. கணக்கை புதுப்பித்து தொழிலை செய்ய முடிகிறது.

எனவே இதுபோன்ற ஜி.எஸ்.டி.யில் உள்ள தொழில்களை பாதிக்கும் சிக்கல்களை, மத்திய அரசு மற்றும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க