• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 3 நாளில் கொரோனாவுக்கு 4 வழக்கறிஞர்கள் உயிரிழப்பு

May 25, 2021 தண்டோரா குழு

கோவையில், கடந்த 3 நாட்களில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த வழக்கறிஞர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.

நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால், கடந்த 18 முதல் நீதிமன்ற பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஜாமீன் மனுக்கள் மீது மட்டும் வாரத்தில் ஒரு நாள், ஆன்லைன் வாயிலாக விசாரணை நடக்கிறது.

நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்
நீதிமன்றத்துக்கு வராமல் இருந்த போதிலும் தொற்று பாதிப்பு குறையவில்லை.இதுவரை 80 க்கும் மேற்பட்ட ஊழியர்களும்,50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20ம் தேதி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சீனியர் வழக்கறிஞர் பழனிச்சாமி 79, உயிரிழந்தார்.இந்நிலையில்,கடந்த 3 நாட்களில் மட்டும் 4 வழக்கறிஞர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் கிறிஸ்டோபர்,65, சுலோச்சனா,78, தாராபுரம் அய்யாசாமி,64, ஆர்.எஸ்.புரம் ராஜேந்திரன்,56, ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க