• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 4 நாளில் 14 போ் தமுமுக சார்பில் நல்லடக்கம் !

May 25, 2021 தண்டோரா குழு

கோவையில் கடந்த 4 நாட்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 14 பேரின் உடல் தமுமுக சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவாின் மதநம்பிக்கை அடிப்படையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அமைப்பு சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி,கோவை மாவட்டத்தில் இதுவரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தால் அவரவாின் மதநம்பிக்கை அடிப்படையில் 220 போ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில்,கோவையில் பல்வேறு மருத்துவமனையில் (21-5-21 முதல் 24-5-21 வரை) கொரோனா தொற்றால் உயிாிழந்த 14 நபா்களை கோவை வடக்கு மாவட்ட தமுமுக நிா்வாகிகள் நல்லடக்கம் செய்துள்ளனர்.

நேற்று 24.5.2021மட்டும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, மதத்தை சேர்ந்த 5 நபர்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனாவால் உயிாிழக்கும் நபா்களை இறுதி மாியாதையுடன் நல்லடக்கம் செய்ய தமுமுக மருத்துவ சேவை அணியை அனுக்கலாம்..

தொடா்புக்கு – 7871201322

மேலும் படிக்க