• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

May 19, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட
பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கிழக்கு
மண்டலத்திற்குட்பட்ட காளப்பட்டி பகுதியில் நேரு நகர்,இளங்கோ நகர்,பிள்ளையார் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அந்தியாவசிய
பொருட்களான காய்கறி, மளிகை, பால் போன்ற பொருட்கள் கிடைக்க பெறுகிறதா? என மக்களிடம் கேட்டறிந்தார்.பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட காலம்
முடியும் வரை யாரும் வீட்டை வீட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வீட்டில் உள்ள அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது,மண்டல சுகாதார அலுவலர் சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க