• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர காவல் ஆணையராக தீபக் எம். தாமோர் பொறுப்பேற்பு !

May 17, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறையின் புதிய ஆணையராக தீபக்.எம்.தாமோர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோவை மாநகர காவல் ஆணையராக சுமித் சரண் பணியாற்றி வந்தார்.சட்டமன்ற தேர்தலையொட்டி இவர் பணி மாற்றம் செய்யப்பட்டார்.இவருக்கு பதிலாக கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.

இவர் தற்போது தமிழ்நாடு காவல் துறையில் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வருகிறார்.தொடர்ந்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை மேற்கு மண்டல போலீஸ் செய்து அமல்ராஜ் கூடுதலாக கவனித்து வந்தார் .தற்போது கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக தீபக்.எம்.தாமோர் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார்.

இவர் இதற்கு முன் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றினார். 2016 – 17 ஆம் ஆண்டு கோவை சரக டிஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் வழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க