May 15, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மெக்ரிக்கர் சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட
பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பெறுகின்றனவா? எனவும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறதா?
எனவும் அமைச்சர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்திட வேண்டுமெனவும் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன்,
நகர் நல அலுவலர் ராஜா
மற்றும் பலர் கலந்துகொண்டனர்.