• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு

May 15, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மெக்ரிக்கர் சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட
பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பெறுகின்றனவா? எனவும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறதா?
எனவும் அமைச்சர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்திட வேண்டுமெனவும் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன்,
நகர் நல அலுவலர் ராஜா
மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க