உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றி, ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை உடற்கல்வி ஆசிரியர்களும் ஊக்க ஊதியம் பெற தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணை வெளியிடப்படுவதற்குப் பாடுபட்ட, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி அவர்களுக்குப் பாராட்டு விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவின் போது தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின்னர், பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தின்படி அனைத்து நிலை உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றம் செய்து, ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்;, மத்திய அரசு ஊதியக்குழு பரிந்துரையை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் சங்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்டன.
இந்த பாராட்டு விழாவில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்