• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி

May 8, 2021 தண்டோரா குழு

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும், அதுதான் நோய்பரவலை தடுக்கும் என கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டால் தமிழகத்தில் கோடானகோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த முழு ஊரடங்கால் எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை.சலூன் கடைகள், காய்கறி வியாபாரிகள் என அனைத்து வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஊரடங்கு ஒரு தீர்வாகாது. இதற்க்கு முன் ஊரடங்கிற்குபின் நாட்டில் அதிகமாக நோய்தொற்று பரவியது.

அரசு தற்போது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும், அதுதான் நோய்பரவலை தடுக்கும். அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் எந்த மக்களின் செலவிற்க்கும் பயனளிக்காது அரசு உடனடியாக குடும்ப அட்டைகளுக்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் மக்களின் பதட்டத்தை தனிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிமையம் மூலம் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் விதமாக இனையதள சேவையை அறிமுகப்படுத்தி மக்களின் பதட்டத்தை போக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க